Thursday, March 18, 2010

கவிஞர்கள் சங்கம விழா - அழைப்பு

உ.வே.சா. தமிழாய்வு மன்றம்
ஆக்கூர் முக்கூட்டு - 609 301.
தரங்கம்பாடி வட்டம்,நாகை மாவட்டம்
தமிழ்நாடு.

எட்டாம் ஆண்டு நிறைவு விழா - கவிஞர்கள் சங்கம அழைப்பிதழ்

தமிழ் மொழிக்குச் சிறந்த நற்சேவையைச் செய்துவரும் உ.வே.சா.தமிழாய்வு மன்றம் எட்டாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கவிஞர்களை ஒன்றிணைக்கும் விதமாக, கவிதைத் தொகுப்பு வெளியிட உள்ளது. இத் தொகுப்பிற்காகக் கவிஞர்களிடமிருந்து கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.
தற்கால இலக்கியம் - கவிதை என்ற தலைப்பில் நூற்தொகுப்புகள் வெளியிடப்பட உள்ளன. இத்தொகுப்பில் தமிழ் மக்களின் வாழ்வியலை உங்களின் கவிதையில் பதிவு செய்யுங்கள். உங்களின் மொழி அமைப்பே தற்காலத் தமிழின் கட்டமைப்பு. கூட்டு முயற்சியின் பதிவே தமிழ்ச் செம்மொழி என்ற அடையாளம்.

விதிமுறைகள்

கவிதைகள் மட்டுமே வரவேற்கப்படுகின்றன
யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
எழுதப்படும் கவிதை தனி மனிதரைப் பற்றியும் சாதி,மதங்களைப் பற்றியும் அமையக்கூடாது. தேசியத்திற்கு எதிராக எழுதக்கூடாது.
தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள் மட்டுமே நூற்தொகுப்பாக ISBN எண்ணுடன் வெளியிடப்படும்.
மரபுக்கவிதை, புதுக்கவிதை, கைக்கூ கவிதை என்ற வரையறை இல்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
பதிவுக் கட்டணம் இல்லை.
கவிஞர்கள் கவிதையுடன் தங்களது தன் விபரக்குறிப்பைப் புகைப்படத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
கவிதைகள் மேலே கண்ட முகவரிக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் - 15.04.2010.

No comments: