Sunday, July 17, 2011

தமிழ்த் தேசியம் ஏன் - தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு(மயிலாடுதுறை - 16.07.2011)



தமிழ்த் தேசியம் ஏன் - தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு(மயிலாடுதுறை - 16.07.2011)

மயிலாடுதுறை தமிழ் ஆர்வலர், சித்தமருத்துவ அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியர் மறைந்த தமிழ்நம்பியின் 4ஆம் ஆண்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தமிழ்வேழம் நாக.இரகுபதி அவர்கள் தலைமை தாங்கினார். வரவேற்புரை திரு.மாரி. பன்னீர்ச்செல்வம் ஆற்றினார். பேராசிரியர் செந்தமிழ் அருவி முனைவர் கி.செம்பியன் முன்னிலை ஏற்றார். சித்தமருத்துவச் சங்க மயிலாடுதுறைத் தலைவர் ச.சுப்பையன் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வில் தமிழ்த்தேசியர், வேர்ச்சொல் ஆராய்ச்சியாளர், சென்னை கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் கு.அரசேந்திரன் சிறப்புரையாற்றினார்.
சிறப்பு சொற்பொழிவாளரை அவைக்கு அறிமுகம் செய்து தமிழ்த்திணையின் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் வே.இரா.பூபதி. இரா.சுரேஷ், விழிகள் இராஜ்குமார் ஆகியோர் கவிதைப் பொழிவு நிகழ்த்தினர். மேலும் மறைந்த தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி குறித்த நினைவேந்தல் உரையை ஏவிசி கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர் கி.இரா.சங்கரன் மற்றும் முனைவர் பரமேஸ்வரி ஆகியோர் ஆற்றினர். மயிலாடுதுறை கல்வி வட்டத்தில் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களைப் பாராட்டி, திருமதி புவனேஸ்வரி தமிழ்நம்பி அவர்கள் பரிசுத் தொகையும் நூல்களையும் வழங்கினார். இறுதியில் தமிழ்ஆர்வலர் திரு.ந.கலியபெருமாள் நன்றி கூறினார். இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட தமிழ்த் தேசிய ஆர்வலர்கள், தமிழ்ச்சான்றோர், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, ஏவிசி கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சு.தமிழ்வேலு சிறப்பாக நடத்தினார்.

ஒளிப்படங்கள் - தமிழ்த்திணை(www.tamilthinai.com)

Wednesday, July 06, 2011

தமிழ்த்திணை - சி.பா.ஆதித்தனார் இதழியல் கழகம் - இலக்கிய வளர்ச்சியில் தமிழ் இதழ்கள் - 4ஆம் கருத்தரங்கம் - அறிவிப்பு அழைப்பு மடல்

தமிழ்த்திணை (www.tamilthinai.com) சார்பு அமைப்பு
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம்



இலக்கிய வளர்ச்சியில் தமிழ் இதழ்கள்
4 - ஆம் கருத்தரங்கம்
அறிவிப்பு – அழைப்பு மடல்



2011 நவம்பர் திங்களில் திருச்சிராப்பள்ளியில் நிகழ்ச்சி நடைபெறும்.
நாள், இடம் பின்னர் அறிவிக்கப்படும்


கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் – அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.



- கருத்தரங்க அமைப்புக் குழு



அன்புடையீர், வணக்கம்.
தமிழ்த்திணையின் சார்பு அமைப்பான சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்கம் இலக்கிய வளர்ச்சியில் தமிழ் இதழ்கள் (சிற்றிதழ்களும் அடங்கும்) என்னும் பொருண்மையில் நடைபெறவுள்ளது. இக் கருத்தரங்கிற்கு ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கட்டுரைகள் ஏ4 பக்கஅளவில் 5 பக்கத்திற்குள் அமைந்திருக்க வேண்டும். கட்டுரைகளைத் தமிழ் யூனிக்கோடு வழி கணினியில் தட்டச்சு செய்ய, NHM Writer என்னும் மென்பொருளை விண்டோ 2000 அல்லது XP இயங்குதளத்தில் நிறுவவேண்டும். லதா எழுத்துரு அல்லது யூனிக்கோடு எழுத்துருவில் கட்டுரைகளை அமைத்துக் கொள்ளலாம். தயார் செய்யப்பெற்ற கட்டுரைகளை tamilthinai@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியில், அனுப்பி வைக்கவேண்டும். அஞ்சல் வழி கட்டுரைகளை அனுப்பி வைப்போர் குறுந்தகட்டில் பதிவு செய்து அனுப்பி வைக்கவேண்டும்.

பேராளர் கட்டணம் ரூ.500/- ஆய்வாளர்களுக்கு ரூ.300/- ஆகும். இக் கட்டணத்தை பணவிடை(M.O.) வழியாக அல்லது தமிழ்த்திணை (TAMILTHINAI) என்னும் பெயரில் வரவோலையாக அல்லது தமிழ்த்திணை – இந்தியன் வங்கிக் கணக்கு எண் : 497781951இல் நேரடியாகவும் தொகையைச் செலுத்தலாம்.

கட்டுரைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் : 31.10.2011

ISBN எண் பெறப்பட்டு, கட்டுரைகள் அடங்கிய ஆய்வுத் தொகுப்பு கருத்தரங்க நாளின்போது வெளியிடப்படும். ஆய்வுக் கட்டுரைகள் மின்நூலாக்கம் செய்யப்பட்டு தமிழ்த்திணை இணைய தளத்திலும் வெளியிடப்படும். மேலும் ஆய்வுத் தொகுப்பு குறுந்தகடு வடிவில் பேராளர்களுக்கு வழங்கப்படும். இவ் வாய்வுக்குக் கோவைக்கு முதன்மைப் பதிப்பாசிரியராக இதழியல் மற்றும் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்ற முனைவர் ம.இளையராஜா (தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக்கல்லூரி, அரியலூர்) செயல்படுவார். அலைபேசி : 9842057123
கட்டுரைகள் மற்றும் பேராளர் தொகை அனுப்பி வைக்கவேண்டிய முகவரி: ஆசிரியர், தமிழ்த்திணை அல்லது தலைவர், சி.பா.ஆதித்தனார் அ.இ. இதழியல் கழகம், 43, செண்பகம் தெரு, பெசண்ட் நகர், மயிலாடுதுறை – 609 001. அலைபேசி : 9443214142.
நிகழ்வில் பார்வையாளர்களாக கலந்துகொள்ள விரும்புவோர் விருந்தினர் தொகை ரூ.250/- செலுத்த வேண்டும்.
கருத்தரங்கம் குறித்த அனைத்து விவரங்களும் www.tamilthinai.blogspot.comஎன்னும் வலைப் பூவில் வெளியிடப்படும். கருத்தரங்க நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையம் வழி நேரலையாக உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படும். இதனை www.livestream.com மற்றும் www.tamilthinai.blogspot.com இணைய தளங்களில் பார்க்கலாம்.




பேராளர் படிவம்

பெயர் :
பதவி :
பணியிட முகவரி :







இல்ல முகவரி :




உடன் வருவோர் எண்ணிக்கை :

பேராளர் தொகை செலுத்தப்பட்ட விவரம் :





கையொப்பம்

விரும்பும் உணவு – தேர்வு செய்க

சைவம் அசைவம்



கருத்தரங்க அமைப்புக் குழு

முனைவர் கு.அண்ணாதுரை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
(நெறியாளர்)

கட்டுரை தெரிவுக் குழு

முனைவர் அரங்க. மல்லிகா(எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை)
முனைவர் கி.சுமதி(ஏவிசி கல்லூரி, மயிலாடுதுறை)
முனைவர் இரா.கலைவாணி(அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோவை)
முனைவர் விஜயராணி(பிஷப்ஹீபர் கல்லூரி, திருச்சி)

அமைப்புக் குழு

முனைவர் தி.நெடுஞ்செழியன்
பேரா.வே.கண்ணையன்
முனைவர் மு.அருணாசலம்
முனைவர் கா.வாசுதேவன்
முனைவர் ம.இளையராஜா
முனைவர் உ.பிரபாகரன்
முனைவர் ஜானகிராமன்
திருச்சி மா.சரவணன்
தமிழ்ச்சுடர் தி.அன்பழகன்
முனைவர் துரை.மணிகண்டன்
பொறி. க.பட்டாபிராமன்
ஆய்வாளர்கள்
திரு.பூ.வெற்றிவேலன்
திரு.ச. கனகசபை
திருமதி. மா. மகாலெட்சுமி
திரு. ஆனந்தன்

ஆய்வுக் களங்கள்
சிறுகதை, நாவல், கவிதை – மரபு கவிதை, புதுக்கவிதை, நாடகம், போன்ற பல்வேறு இலக்கிய வகைகளின் வளர்ச்சிக்கு உதவும் இதழ்கள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் வழங்கலாம். தனி இதழ்கள், ஒவ்வொரு இலக்கிய வளர்ச்சிக்குதவும் இதழ்கள் குறித்து வரலாற்று நோக்கிலும் ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரை அளிக்கலாம். இதில் தனிச்சுற்று இதழ்கள், வளாக இதழ்கள், சிற்றிதழ்கள், இணைய இதழ்கள் இவற்றையும் ஆய்வுப் பொருளாகக் கொள்ளலாம். தமிழகம், தென்னிந்தியா, வடஇந்தியா என உலகம் முழுவதும் உள்ள இலக்கிய இதழ்கள், இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் இதழ்கள் என எல்லா இதழ்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி கட்டுரை வரையலாம்.

Tuesday, July 05, 2011

மயிலாடுதுறையில் வள்ளுவர் கோட்டம் - 03.07.2011- திறப்பு


தமிழறிஞர் ச.தண்டபாணிதேசிகர் பெயரன் பொறியாளர் நா.இமயவரம்பன் அவர்கள் மயிலாடுதுறை விசித்திராயர் வீதியில் வள்ளுவர் கோட்டம் அமைத்துள்ளார். தன் இல்லத்தின் முகப்பில் திருவள்ளுவர் சிலையையும் அமைத்துள்ளார். இதன் திறப்பு விழா 03.07.2011 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.
இந்த விழாவிற்குச் செந்தமிழ் அருவி முனைவர் கி.செம்பியன் தலைமை தாங்கினார். நல்லாசிரியர் கோ.நீலகண்டன் அவர்கள் வள்ளுவர் கோட்டத்தைத் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஏவிசி கல்லூரி முன்னை முதல்வர் முனைவர் மு.வரதராசன், புலவர் சி.பன்னீர்செல்வம் டி.எஸ்.தியாகராஜன், இரா.செல்வநாயகம் போன்ற ஆன்றோர்கள், சான்றோர்கள், தமிழறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் கோவை அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழக இசைத் துறைப் பேராசிரியர் குடியரசு தலைவரிடம் செம்மொழி விருது பெற்ற முனைவர் இரா.கலைவாணி அவர்கள் அன்புடமை, விருந்தோம்பல் அதிகாரத்தை இசைக் கூட்டி பாடினார். முனைவர் கோ.இரவிசெல்வம் நன்றி கூறினார். இவ்விழாவில் தமிழ்த்திணை ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.