Sunday, July 17, 2011

தமிழ்த் தேசியம் ஏன் - தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு(மயிலாடுதுறை - 16.07.2011)



தமிழ்த் தேசியம் ஏன் - தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு(மயிலாடுதுறை - 16.07.2011)

மயிலாடுதுறை தமிழ் ஆர்வலர், சித்தமருத்துவ அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியர் மறைந்த தமிழ்நம்பியின் 4ஆம் ஆண்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தமிழ்வேழம் நாக.இரகுபதி அவர்கள் தலைமை தாங்கினார். வரவேற்புரை திரு.மாரி. பன்னீர்ச்செல்வம் ஆற்றினார். பேராசிரியர் செந்தமிழ் அருவி முனைவர் கி.செம்பியன் முன்னிலை ஏற்றார். சித்தமருத்துவச் சங்க மயிலாடுதுறைத் தலைவர் ச.சுப்பையன் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வில் தமிழ்த்தேசியர், வேர்ச்சொல் ஆராய்ச்சியாளர், சென்னை கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் கு.அரசேந்திரன் சிறப்புரையாற்றினார்.
சிறப்பு சொற்பொழிவாளரை அவைக்கு அறிமுகம் செய்து தமிழ்த்திணையின் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் வே.இரா.பூபதி. இரா.சுரேஷ், விழிகள் இராஜ்குமார் ஆகியோர் கவிதைப் பொழிவு நிகழ்த்தினர். மேலும் மறைந்த தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி குறித்த நினைவேந்தல் உரையை ஏவிசி கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர் கி.இரா.சங்கரன் மற்றும் முனைவர் பரமேஸ்வரி ஆகியோர் ஆற்றினர். மயிலாடுதுறை கல்வி வட்டத்தில் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களைப் பாராட்டி, திருமதி புவனேஸ்வரி தமிழ்நம்பி அவர்கள் பரிசுத் தொகையும் நூல்களையும் வழங்கினார். இறுதியில் தமிழ்ஆர்வலர் திரு.ந.கலியபெருமாள் நன்றி கூறினார். இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட தமிழ்த் தேசிய ஆர்வலர்கள், தமிழ்ச்சான்றோர், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, ஏவிசி கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சு.தமிழ்வேலு சிறப்பாக நடத்தினார்.

ஒளிப்படங்கள் - தமிழ்த்திணை(www.tamilthinai.com)

No comments: