Sunday, May 01, 2011

வைகோவுக்குப் பாராட்டு விழா - 26.04.2011 - இராஜா அண்ணாமலை மன்றம், சென்னை

தமிழீழம் சென்ற பெருஞ்சித்திரனார் பெயர்த்தி வழக்கறிஞர் கயல்(எ) அங்கையற்கண்ணி அவர்களை சிங்கள இராணுவம் கைது செய்தது. இந்தச் செய்தியறிந்த வைகோ அவர்கள் இந்தியத் தலைமையமைச்சர் மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து கயலை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் கயல் விடுதலை செய்யப்பட்டார். இந்த விடுதலைக்கு உதவியாக இருந்த வைகோவுக்கு உயர்நீதிமன்ற தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் பாராட்டு - நன்றி தெரிவிக்கும் விழா சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. நகர்வு ஒளிப்படங்கள் படமாக்கம் - முனைவர் தி.நெடுஞ்செழியன்