Friday, November 15, 2019









Saturday, November 02, 2019

keeladi Song

keeladi Song

Monday, February 11, 2019

மகள் யாழினி இளநிலை ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார்.

என் மகள் யாழினி தொடக்கக் கல்வி, மற்றும் உயர்நிலைக் கல்வியை மயிலாடுதுறையில் படித்தார். பின்னர் நான் திருச்சிக்குப் பணிமாறுதல் பெற்றக் காரணத்தால், யாழினி தன் மேல்நிலைக் கல்வியை திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு பதின்ம பள்ளியில் பயின்றார். பின்னர் 2015-18ஆம் ஆண்டுகளில் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் பயின்றார். தற்போது முதுகலை ஆங்கிலம் அதே கல்லூரியில் பயின்று வருகிறார். இளங்கலை ஆங்கிலத்திற்கான பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கிய பட்டத்தைக் கல்லூரியில் 09.02.2019ஆம் நாள் நடைபெற்ற விழாவில் பெற்றுக்கொண்டார்.

தூய வளனார் கல்லூரி மாணவருக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சிறப்பு விருது வழங்கினார்

திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு கணிப்பொறி அறிவியல் படித்துவரும் மாணவர் நிலவன், +2 பெரியார் நூற்றாண்டு மெட்ரிக் பள்ளியில் (2016-18) கல்வியாண்டில் படித்தார். 2017-18 கல்வியாண்டில் 100% வருகைப் பதிவிற்காக அப் பள்ளியின் நிறுவனர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் சிறப்பு விருதைப் பெற்றார்.