Friday, August 10, 2012

திருச்சி தேசியக் கல்லூரிக்குத் தமிழக அரசு நெத்தியடி

திருச்சி தேசியக் கல்லூரியில் வரலாற்று சிறப்புமிக்க தத்துவத்துறையை இழுத்து மூடுவது என்ற நிர்வாகத்தின் முடிவை ஏற்க மறுத்து, தமிழ்நாடு உயர்கல்வித் துறை செயலர் அக் கல்லூரி முதல்வருக்கு அனுப்பியிருக்கும் பதில் என்பதைவிட நெத்தியடி என்பதே பொருத்தமாகும். உண்ணாநிலை மேற்கொண்ட போராசிரியர்களுக்கும், தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பேராசிரியர்களுக்கும் நம் நன்றிகள் என்றும் உரியன.