Sunday, March 27, 2011

சாரங்கபாணி வீடியோ 5

செம்மொழி ஆய்வு நிறுவன ஆய்வாளர் முனைவர் கோ.அதியமான், தமிழர் உரிமை இயக்கம் பேராசிரியர் முரளிதரன் - உரை

சாரங்கபாணி நினைவு நாள் - செல்வி ஏழிசைப்பாவை நடனம்

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் சு.தமிழ்வேலு, கோவை அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழக இசைத்துறை இணைப்பேராசிரியர் இசைவாணி முனைவர் கலைவாணி இவர்களின் புதல்வி செல்வி ஏழிசைப்பாவை. இவர் தற்போது மயிலாடுதுறை அருட் சின்னபர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

Monday, March 21, 2011

சாரங்கபாணி நினைவுநாள் - வீடியோ2

முனைவர் சு.தமிழ்வேலு, முனைவர் கி.செம்பியன் - உரைகள்

Tuesday, March 15, 2011

இந்தி எதிர்ப்பு ஈகி மாணவர் சாரங்கபாணி நினைவுநாள் விழா - மயிலாடுதுறை -15.03.2011

இந்தி மொழி எதிர்ப்பு ஈகி மாணவர் சாரங்கபாணி நினைவுநாள் கருத்தரங்கம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் செம்மொழி நிறுவன ஆய்வு நெறியாளர் அரணமுறுவல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஏவிசி கல்லூரி முன்னைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கி.செம்பியன், தமிழ்வேழம் நாக.இரகுபதி மற்றும் தமிழ்உணர்வாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஏவிசி கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சு.தமிழ்வேலு ஏற்பாடு செய்திருந்தார்.

தமிழ்மரபு அறக்கட்டளை-பாராட்டு விழா-தமிழ்ப் பல்கலைக்கழகம்

தமிழ்மரபு அறக்கட்டளையின் பணிகளைப் பாராட்டி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 03.03.2011ஆம் நாள் பாராட்டுவிழா நடைபெற்றது. அதில் அறக்கட்டளையின் துணைத்தலைவர் திருமிகு சுபாஷினி அவர்கள் கலந்துகொண்டார். அதன் காணொளித் தொகுப்பு
நன்றி - தமிழ்த்திணை- படமாக்கம் - முனைவர் தி.நெடுஞ்செழியன்

AUT - கல்வி சார் கருத்தரங்கம் - கோயமுத்தூர்

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்(பதிவு)
கல்விசார் ஆண்டு கருத்தரங்கம் - கோயமுத்தூர்
நகர்வு ஒளிப்படங்கள்