
சூரியகதிர் இதழும் - தமிழ்த்திணை இணைய இதழும் இணைந்து நடத்தும்
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 3ஆம் கருத்தரங்கம் மற்றும்
தமிழ்த்திணை ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 3ஆம் கருத்தரங்கம் மற்றும்
தமிழ்த்திணை ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா
நாள் : சூன் திங்கள் 5 மற்றும் 6 ஆம் நாட்களில் (சனி, ஞாயிறு)
இடம் : பொன்கைலாஷ் விடுமுறை இல்ல விடுதி, ஏற்காடு - சேலம்
பேரன்புடையீர், வணக்கம்.
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 3ஆம் கருத்தரங்கம் தமிழில் அறிவியல் - தொழில்நுட்ப இதழ்கள் என்னும் பொருண்மையில் நடைபெறவுள்ளது. இந்தப் பொருண்மையில் கட்டுரை எழுத விரும்புவோர் கட்டுரையில் கணினியில் தட்டச்சு செய்து கட்டுரையை அச்சு வடிவத்திலும் குறுந்தகட்டிலும் (தட்டச்சு செய்யும் எழுத்துருவையையும்) அனுப்பி வைக்கவேண்டும்.
ஒருங்குறியீடு என்னும் Unicode இல் தட்டச்சு செய்வோர் கட்டுரைகளை tamilthinai@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி விடலாம்.
கருத்தரங்கில் கலந்துகொள்ள பேராளர் கட்டணம் ரூ.500/-ஐ ஆசிரியர், தமிழ்த்திணை, 43 - செண்பகம் தெரு, பெசண்ட் நகர், மயிலாடுதுறை - 609 001 என்ற முகவரிக்கு (M.O.) அனுப்பி வைக்கவேண்டும். அதில் பேராளரின் இல்ல முகவரி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். கட்டுரைகளை அனுப்பி வைக்கவேண்டிய கடைசி நாள் : 15.05.2010
கட்டுரைகளை உரிய நேரத்தில் அனுப்பி வைக்க இயலாத பேராளர்கள் பேராளர் தொகை அனுப்பி வைத்து தங்கள் வருகையை உறுதி செய்துகொண்டு, கட்டுரையை நேரடியாகவும் கருத்தரங்கில் அளிக்கலாம். கட்டுரை ஏ4 அளவில் 5 பக்கங்களுக்குள் அமைத்திருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ஆசிரியர், தமிழ்த்திணையைத் தொடர்பு கொள்ளலாம் - அலைபேசி எண் - 9443214142
No comments:
Post a Comment