Thursday, April 15, 2010

சிறை சென்ற மாணவ வீரர்களுக்குப் பாராட்டு விழா - SFI மயிலாடுதுறை


ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்தும் அரசாணை எண்-170ஐ இரத்து செய்யக் கோரி நடத்தியப் போராட்டத்தில் சிறை சென்ற மாணவ வீரர்களுக்கு இந்திய மாணவர் சங்கம் சார்பில் பாராட்டு விழா 14.04.2010 ஆம் நாள் மயிலாடுதுறை ROA கட்டடத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு இந்திய மாணவர் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலர் சிங்காரவேலன் தலைமை தாங்கினார். இந்திய தொழிற்சங்க மையத்தின் நாகை மாவட்டச் செயலர் ஆர்.இராமானுசம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தஞ்சை மண்டலத் தலைவர், ஏவிசி கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன், இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டச் செயலர் மற்றும் அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்துகொண்டு சிறை சென்ற மாணவர்களுக்குப் பாராட்டும்முகத்தான் நினைவு பரிசுகளை இந்திய மாணவர் சங்கத்தின் அகிலஇந்திய துணைச் செயலர் தோழர் செல்வா, தமிழ்நாடு மாநிலச் செயலர் தோழர் கே.எஸ்.கனகராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியில் கிட்டப்பா மேல்நிலைப்பள்ளி இந்திய மாணவர் சங்கப்பொறுப்பாளர் நன்றி கூறினார். இந்த விழாவில் சிறை சென்றதற்ககாப் பரிசு பெற்ற அனைவரும் 18 வயதிற்கும் கீழானவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. படிப்போம் போராடுவோம் என்பதைத் தாண்டி சிறையும் செல்வோம் என்பது தமிழ்நாட்டு அரசியல் களத்தில் புத்தம்புதிய செய்தியாக அமைந்திருந்தது. வாழ்த்துவோம் மாணவர்களையும் இந்திய மாணவர் சங்கத்தையும்.
-தமிழ்த்திணைக்காக மயிலாடுதுறையிலிருந்து நெ.நிலவன்

No comments: