Monday, March 15, 2010

மாணவர் சாரங்கபாணி நினைவுநாள்

மாணவர் சாரங்கபாணி நினைவுநாள் - 15.03.2010



சிறப்புரை : எழுத்தாளர்,கவிஞர் சூரியதீபன்

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தாய்மொழிக் காக்க தன்னுயிரை தீயினுக்குக் கொடுத்து இந்தி ஆதிக்கத்தைத் தடுத்தான் என்பது மொழிப் போராட்ட வரலாறு. இதேநாளில் 1965இல் ஈகியாய் தமிழர்தம் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மாணவமணி சாரங்கபாணியின் நினைவுநாள் சிறப்புக் கூட்டம் மயிலாடுதுறை வருவாய் அலுவலர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திரு.நாக.இரகுபதி தலைமை தாங்கினார். இந்த விழாவில் ஏவிசிக் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் த.செயராமன், தமிழறிஞர் முனைவர் கி.செம்பியன், மயிலாடுதுறை முத்தமிழ்மன்றத் தலைவர் சிவ.கோபாலகிருட்டினன்,தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் பேராசிரியர் இரா.முரளிதரன் ஆகியோர் உரையாற்றினார்கள். மொழிப் போராட்டக் களவீரர், எழுத்தாளர்,கவிஞர் சூரியதீபன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவிற்கு ஏவிசி கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சு.தமிழ்வேலு வரவேற்புரையாற்றினார். தமிழ்ச் சான்றோர் ந.கலியபெருமாள் நன்றி கூறினார். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் திரண்டுவந்து விழாவைச் சிறப்பித்தார்கள். தமிழ்த்திணையின் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் தமிழ்த்திணைக்காக ஒளிப்படங்களை எடுத்தார்.
- தமிழ்த்திணைக்காக மயிலாடுதுறையிலிருந்து நிலவன்(சிறப்புச் செய்தியாளர்)

No comments: