Tuesday, December 14, 2010

ஒருமைவகைப் பல்கலைக்கழகம் எதிர்ப்பு - AUT, MUTA,TANTASC - சென்னை (12.12.2010)



சென்னை புதுப்பேட்டை பின்னி இணைப்புச்சாலையில் 12.12.2010 ஞாயிறு அரசு உதவிபெறும் கல்லூரிகளை ஒருமைவகைப் பல்கலைக்கழகமாக மாற்றும் தமிழக அரசின் முயற்சியைக் கண்டித்து பெருந்திரள் உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக,மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம் பங்கேற்றன. இதில் சுமார் 1200பேர் கலந்துக்கொண்டனர்.
இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னணித் தலைவர் தளவாய் சுந்தரம் உரையாற்றினார். சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன், இந்திய மாணவர் சங்கம் மாநில பொறுப்பாளர் இராஜ்மோகன் எனப் பலரும் உரையாற்றினார்கள்.
ஆசிரியர், அலுவலவர், மாணவர் அமைப்பு நடத்திய இந்த உண்ணாவிரதம் சிறப்பாக நடந்தேறியது.

சென்னையிலிருந்து நிலவன்

No comments: