Tuesday, December 14, 2010

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் - ஏவிசி கல்லூரி -14.12.2010

ஒருமைவகைப் பல்கலைக்கழக முயற்சியை முழுமையாகக் கைவிடக்கோரி இந்திய மாணவர் சங்கம்
ஏவிசி கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம்

அரசு உதவிபெறும் கல்லூரிகளான மதுரை தியாகராசர கல்லூரி, கோவை பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி நிறுவனங்களைத் தனியார் சுயநிதி ஒருமைவகைப் பல்கலைக்கழகமாக மாற்றும் தமிழக அரசின் முயற்சியை முழுமையாகக் கைவிடக் கோரி மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி வாயில் முன்பு காலை 9 மணியளவில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க நாகை மாவட்டத் தலைவர் பி.மாரியப்பன் தலைமை தாங்கினார். ஒருமைவகைப் பல்கலைக்கழகம் அமைந்தால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், தனியார்மயம், தராளமயம் இவற்றிற்கு ஊக்கம் அளிக்கும் செயலாக இருக்கும் என்பதை வலியுறுத்தி நாகை மாவட்ட இந்திய மாணவர் சங்கச் செயலாளர் வா.சிங்கரவேல் அவர்கள் எடுத்துரைத்து எழுச்சியுரையாற்றினார். மாணவர், ஆசிரியர் இந்தப் பிரச்சனையில் போராடத் தேவையில்லை என்ற தமிழக முதல்வர் அவர்களின்அறிக்கை வெளிவர இந்தி மாணவர் சங்கம் தொடக்க நிலையிலிருந்து உறுதியாக இருந்தது என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத தஞ்சை மண்டலத் தலைவர் பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் பாராட்டினார். இந்திய மாணவர் சங்கம் மாணவர்களின் அடிப்படையான உரிமையான கல்வி உரிமைக்காகப் போராடி வருகின்றது. அதன் செயல்பாடுகளுக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ஏவிசி கிளைப் பொருளாளர் பேராசிரியர் முனைவர் எம்.மதிவாணன் எடுத்துக்கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத் துணைத் தலைவர் எஸ்.சரண்ராஜ், ஏவிசி கல்லூரி இந்திய மாணவர் சங்கக் கிளை நிர்வாகிகள் ஜெபராஜ், செல்லத்துரை, ஸ்டாலின், பிரவீண் மற்றும் 100க்கான மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இந்திய மாணவர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.தமிழரசன் நன்றி கூறினார்.

No comments: