Monday, May 31, 2010
ஏவிசி கல்லூரி - புதிய முதல்வர்(பொ) - பேராசிரியர் ஆர்.ஞானசேகரன்
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியின் புதிய பொறுப்பு முதல்வராக வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஆர்.ஞானசேகரன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர்(பொ) ஆர்.ஞானசேகரன் அவர்களுக்கு ஏவிசி கல்வி நிறுவனங்களின் தலைவர் சொ.செந்தில்வேல் சால்வை, சந்தனமாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். கல்விசார அலுவலர்கள் சார்பிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர் ஆர்.ஞானசேகரன் பேசும்போது, நான் ஏற்றுக் கொண்டுள்ள இந்தப் பொறுப்பின் மூலம் கல்லூரி வளர்ச்சிக்காக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து தரப்பினரும் நல்லாதரவு வழங்கிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மயிலாடுதுறையிலிருந்து தமிழ்த்திணையின் சிறப்பு செய்தியாளர் நெ.நிலவன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment