Monday, May 10, 2010

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் - உண்ணாவிரதம் - சென்னை(06.05.2010)


பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில், நிதியுதவி பெறும் கல்லூரிகளில் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிதி மற்றும் நிர்வாகச் சீர்கோடுகளைக் கண்டித்தும், ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் மீது நடைபெற்றுவரும் பணிநீக்கம், பணிஇடைநீக்கம் போன்ற நடவடிக்கைகளை நிதியுதவி பெறும் கல்லூரிகள் கைவிடக் கோரியும் உண்ணாவிரதம் 06.05.2010ஆம் நாள் சென்னையில் உள்ள பின்னி இணைப்புச் சாலையில் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்திற்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பெ.ஜெயகாந்தி தலைமை வகித்தார். மூட்டா பொதுச்செயலர் விவேகானந்தன் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். பொதுச்செயலர் முனைவர் பன்னீர்செல்வம் உண்ணாவிரதத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார். பாமக சட்டமன்றக் கட்சித் தலைவர் கோ.கா.மணி கலந்துகொண்டு உரையாற்றினார். மாலையில் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி இலதா அவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துவைத்து நிறைவுரையாற்றினார்.

No comments: