Tuesday, February 23, 2016
முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு நிகழ்ச்சி
08.11.2013ஆம் நாள் தஞ்சை நகரை அடுத்துள்ள விளார் என்னும் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்பட்டதன் தொடர்ச்சியாக தலைவர்கள் பலர் உரையாற்றினார்கள். இந்த விழாவிற்குத் புதியபார்வை இதழ் ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்கினார். முற்றத்தை அமைக்க கடந்த 3 மாத காலம் அரும்பாடுபட்ட ஐயா பழ.நெடுமாறன் கோபம், ஆவேசம், நெகழ்ச்சி என பல்வேறு நிலைகள் உரையாற்றினார். பெ.மணியரசன், இந்திய பொதுவுடமைக் கட்சியின் சி.மகேந்திரன், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், பாஜக மாநிலத் தலைவர் பொன்.இராதாகிருட்டிணன் உரையாற்றினார்கள். நிகழ்வின் இறுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலர் வைகோ உரையாற்றினார். நிகழ்வின் தொடக்கத்தில் தேனிசை செல்லப்பாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் ஒளிப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment