Tuesday, July 27, 2010

JAC 8 - அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏவிசி கல்லூரி வாயில் முன்பு முழக்கப் போராட்டம்(27.07.2010)





JAC 8 - அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏவிசி கல்லூரி வாயில் முன்பு முழக்கப் போராட்டம்

கல்லூரி ஆசிரியர் மற்றும் அலுவலர் கூட்டு நடடிவக்கைக் குழு எடுத்த முடிவின்படி, தமிழக அரசு மற்றும் உயர்கல்வித் துறையை வலியுறுத்தி மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி வாயில் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏவிசி கிளைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவராமன் தலைமை தாங்கினார். அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலர் சங்கத்தின் மடாநிலப் பொறுப்பாளர் இரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். 8அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தஞ்சை மண்டலத் தலைவர் முனைவர் தி.நெடுஞ்செழியன் தொடக்கவுரை ஆற்றினார். போராட்டத்தில் 8 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
1. 1.1.2006 முதல் பணப்பயனையும் நிலுவைத் தொகை வழங்கிடுக.
2.ஆசிரியர்களின் பணி ஓய்வு வயதை 65ஆக உயர்த்திடுக.
3. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்துப் படிகளையும் ஆசிரியர்,அலுவலர்களுக்கு வழங்கிடுக.
4.பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுக. வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக.
5.முன்கூட்டியே பெறும் ஓய்வூதிய பணத்தின் அளவை 40 விழுக்காடாக உயர்த்திடுக.
6.பணிமூப்பில் இளையோர் பணிமூப்புடையோரைவிட அதிக ஊதியம் பெறும் முரண்பாடுகளை களைந்திடுக.
7.முழுஓய்வூதியம் பெற்றிட 30 ஆண்டுகள் என்றிருப்பதை 20 ஆண்டுகள் எனக் குறைத்திடுக.
8.அரசு,அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியாகவுள்ள ஆசிரியர்,ஆசிரியர் அல்லாத அலுவலர் பணியிடங்களை உடனே நிரப்பிடுக.
இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் முனைவர் இராமசாமி, முனைவர் செல்வநாதன் அலுவலர் சங்கதின் பொறுப்பாளர்கள் கமலமுருகன், கமலநாதன் மற்றும் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இறுதியில் முனைவர் எம்.மதிவாணன் நன்றி கூறினார்.

மயிலாடுதுறையிலிருந்து நிலவன்

No comments: